உடுமலை சின்னவீரன்பட்டி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

உடுமலை சின்ன வீரன் பட்டியில் நாளை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு.


திருப்பூர்: உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில்களில் நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பேரூர் சாந்த லிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இன்று சின்னவீரன்பட்டி காளியம்மன் கோவிலிலிருந்து முக்கிய வீதி வழியாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரியமான வாத்தியத்துடன் முளைப்பாரி, தீர்த்த கலசங்கள் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.



பின்னர் விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...