உடுமலை சின்னவீரன்பட்டி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

உடுமலை சின்ன வீரன் பட்டியில் நாளை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு.


திருப்பூர்: உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில்களில் நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பேரூர் சாந்த லிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இன்று சின்னவீரன்பட்டி காளியம்மன் கோவிலிலிருந்து முக்கிய வீதி வழியாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரியமான வாத்தியத்துடன் முளைப்பாரி, தீர்த்த கலசங்கள் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.



பின்னர் விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...