தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தினம் - தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய யானைகள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 74 வது குடியரசு தின விழாவில் வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாமில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றபடும். அப்போது வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு வனத்துறை ஊழியர்களை போல மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தும்.



இந்த நிலையில் இன்று 74 வது குடியரசு தின விழா வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.



அப்போது அம்முகுட்டி, சங்கர், பாமா, கிருஷ்ணா உள்ளிட்ட யானைகள் வரிசையாக நின்று தேசியக்கொடி ஏந்தி யானைகள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.



பின்னர் வனசரகர்கள்,வனகாப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் அணிவகுத்து நின்று இணை இயக்குநர் வனத்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது அணிவகுத்து நின்ற யானைகள் பிளரியபடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது.இவ்வகழாவில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை செலுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...