உடுமலை எஸ்.வி.புரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

உடுமலை எஸ்.வி.புரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி.புரம் பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் ரோடு எஸ்.வி.புரம் வழியாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, பிரதான வழித்தடமாக உள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் நெரிசல் மிகுந்த இந்த சாலையின், நகரப்பகுதியில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், சாலையை ஆக்கிரமித்து, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரதான வழித்தடமாக உள்ள இந்த சாலையை, அகலப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மீண்டும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...