மேட்டுப்பாளையம் அருகே மசூதியில் வழிபாடு நடத்துவதில் தகராறு - இருவர் காயம்

மேட்டுப்பாளையம் அருகே பழமையான பெள்ளாதி தர்க்காவில் வழிபாடு நடத்துவதில் சுன்னத் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் இருவர் காயம்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் பழமையான தர்காவில் இருதரப்பினர் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருவர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் மிக பழமையான தர்கா உள்ளது.இந்த தர்காவை சுன்னத் ஜமாத் அமைப்பினர் நிர்வகித்து வரும் நிலையில், இந்த தர்காவில் தொழுகை நடத்த ஜக்கிய ஜமாஅத் அமைப்பினர் மற்றும் சுன்னத் ஜமாத் அமைப்பினர் இடையே இன்று பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

ஜக்கிய ஜமாஅத் பிரிவினர் தொழுகை நடத்த வந்த போது, மற்றொரு தரப்பான சுன்னத் ஜமாத் அமைப்பினர் கதவை மூடியதால் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிக் கைகலப்பாக மாறி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.



இதில் தவ்ஹீத் ஜமாஅத் சேர்ந்த முகமது இஸ்மாயில், நசீர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது சம்பந்தமாக காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுன்னத் ஜமாத் அமைப்பினர் மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மசூதியில் வழிபாடு மேற்கொள்ள இரு தரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...