மேட்டுப்பாளையம் அருகே மசூதியில் வழிபாடு நடத்துவதில் தகராறு - இருவர் காயம்

மேட்டுப்பாளையம் அருகே பழமையான பெள்ளாதி தர்க்காவில் வழிபாடு நடத்துவதில் சுன்னத் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் இருவர் காயம்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் பழமையான தர்காவில் இருதரப்பினர் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருவர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் மிக பழமையான தர்கா உள்ளது.இந்த தர்காவை சுன்னத் ஜமாத் அமைப்பினர் நிர்வகித்து வரும் நிலையில், இந்த தர்காவில் தொழுகை நடத்த ஜக்கிய ஜமாஅத் அமைப்பினர் மற்றும் சுன்னத் ஜமாத் அமைப்பினர் இடையே இன்று பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

ஜக்கிய ஜமாஅத் பிரிவினர் தொழுகை நடத்த வந்த போது, மற்றொரு தரப்பான சுன்னத் ஜமாத் அமைப்பினர் கதவை மூடியதால் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிக் கைகலப்பாக மாறி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.



இதில் தவ்ஹீத் ஜமாஅத் சேர்ந்த முகமது இஸ்மாயில், நசீர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது சம்பந்தமாக காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுன்னத் ஜமாத் அமைப்பினர் மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மசூதியில் வழிபாடு மேற்கொள்ள இரு தரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...