உதகை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா - பாரம்பரிய நடனமாடிய தோடர்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பொள்சி எனும் அழைக்கப்படும் கோவில் திருவிழாவில் தோடர் இன ஆண்கள் மட்டுமே பங்கேற்பு. இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை.



நீலகிரி: உதகை அருகே 70 கிராம தோடர் இன ஆண்கள் பங்கேற்ற திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன ஆதிவாசி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மந்து என்று அழைக்கப்படும் 70 கிராமங்களில் சுமார் 2000 தோடர் இன மக்கள் உள்ளனர். இந்த மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் வினோதமானதாகவே உள்ளது.

இந்த நிலையில் உதகை அருகே உள்ள தாரநாடு மந்து தோடர் இன மக்களின் கோவில் ஒன்று சோலூர் அருகே அமைந்துள்ளது.



இக்கோவில் 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டது. அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்குச் சென்று அவுல் என்ற புற்களையும், பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதுபிக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா நடைபெற்றது. தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைபடி கோவிலின் முன்பு ஒன்று கூடிய மண்டியிட்டு வணங்கினர்.



இதனையடுத்து கோவிலின் வாயிலின் முன்புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.



இதனையடுத்து அருகில் உள்ள புல்வெளியில் ஒன்று திரண்ட தோடர் இன ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளைக் கோர்த்து வட்டமாக நின்று தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



பெண்களுக்கு இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...