கோவையில் வண்ணங்களில் மிளிரும் செயற்கை நீரூற்று - சோதனையோட்டம் ரசித்த பார்வையாளர்கள்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செயற்கை நீரூற்றின் சோதனையோட்டத்தை, பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றின் சோதனையோட்டம் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிளப் சாலை அரசு கல்லூரி சந்திக்கும் பகுதியில் இருந்த தீவுத்திடல் மாற்றி அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான செயற்கை நீரூற்று அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.



தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செயற்கை நீரூற்றுக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் நடத்தப்படும் சோதனையோட்டத்தின்போது, பல வண்ணங்களில் மிளிரும் பிரம்மாண்ட செயற்கை நீரூற்றை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்துவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...