தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி எதிரொலியாக உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னை விவசாயிகள், தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த கெடிமேடு பகுதியில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) தேங்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட போது உரிக்கூலியாக தேங்காய்க்கு 82 பைசா வழங்கப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் 70 பைசாவாக குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2) மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையாக 150 ரூபாய் வழங்க வேண்டும்.

3) தேங்காய் எண்ணெய் தயாரிப்பு ஆலைகளை தமிழகத்தில் உருவாக்கி நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...