நீலகிரியில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உட்பட இருவர் கைது..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீஜித். அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்.

இந்நிலையில், இவர்களிடம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராமப்புற குடிசை மாற்று வீடு கட்டுவதற்காக கதவு எண் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், கதவு எண் வழங்காமல் தாமதித்து வந்ததுடன், அதற்காக 11,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென ஸ்ரீஜித் கேட்டதாக கூறப்படுகிறது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் கலந்த 11,000 ரூபாயை கொடுத்து ஸ்ரீஜித்தின் உதவியாளர் ரமேஷிடம் கொடுக்க வைத்துள்ளனர்.



இந்நிலையில், ரமேஷ் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...