உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால திறன் பயிற்சி

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், குறுகிய கால திறன் பயிற்சி பெற விரும்புவோர், திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.


திருப்பூர்: உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், தமிழக அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறுகிய கால திறன் பயிற்சி அளிக்கும் மையமாகப் படச் செயல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரீசியன் டொமஸ் சொல்யூசன்ஸ், தொழிற்பிரிவு, 100 நாட்கள், 400 மணி நேரம் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

இதில் சேர, 8, 10ஆம் வகுப்பு அல்லது ஒரு ஆண்டு முன் அனுபவம் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், 18 முதல் 45 வயது வரை உள்ள, ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

இலவச பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன், முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன், உடனடி வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் போக்குவரத்து படி வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்புவோர், உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம், என அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ராஜேஸ்வரி விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...