கோவை வீரபாண்டி அருகே கேரள லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது..!

வீரபாண்டியை அடுத்த காளிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வீரபாண்டியை அடுத்த காளிபாளையம் பகுதியில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் சின்ன கருப்புசாமி என்பது தெரியவந்தது.

இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிவந்து திருட்டுத்தனமாக விற்று வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கேரள லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...