தாராபுரம் அருகே பைக்கில் இருந்து தடுமாறி விழுந்ததில் பெண் பலி

புதுக்கோட்டையிலிருந்து குண்டடம் செல்ல பைக்கில் குடும்பத்துடன் வந்த உணவக உரிமையாளர் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பைக்கில் சென்ற போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒய்யான் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்-திவ்யா தம்பதி. இவரது மகன் சிவபாலன்(8), மகள் சிவன்யஸ்ரீ(6), ஆகியோருடன் குண்டடம் அடுத்த மேட்டுக் கடையைப் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விஸ்வநாதன் அப்பகுதியில் சாலையோர தள்ளுவண்டி உணவகம் கடை நடத்தி வருகிறார். இவர் பொங்கலுக்காக குடும்பத்துடன் பைக்கில் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு குண்டடம் செல்ல குடும்பத்துடன் தாராபுரம் வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

வரப்பாளையம் அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதால் பின்னால் அமர்ந்திருந்த மனைவி திவ்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே திவ்யா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...