வால்பாறை சுப்ரமணியசாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழா

வால்பாறையில் உள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் பிப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் 18 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்வு வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6 மணி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து 5ஆம் தேதி காலை 9 மணிக்கு வால்பாறை ஓம் சக்தி வழிபாடு, மன்ற குழுவினர் சார்பில் பால்குட தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து நல்லகாத்து எஸ்டேட் பாலத்தில் இருந்து முருக பக்தர்கள் அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு சென்று 11 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானை தேவியுடன் முருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில், தைப்பூச விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ள நிலையில், திருக்கல்யாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் விரைவாக செய்து வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...