வால்பாறை சுப்ரமணியசாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழா

வால்பாறையில் உள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் பிப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் 18 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்வு வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6 மணி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து 5ஆம் தேதி காலை 9 மணிக்கு வால்பாறை ஓம் சக்தி வழிபாடு, மன்ற குழுவினர் சார்பில் பால்குட தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து நல்லகாத்து எஸ்டேட் பாலத்தில் இருந்து முருக பக்தர்கள் அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு சென்று 11 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானை தேவியுடன் முருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில், தைப்பூச விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ள நிலையில், திருக்கல்யாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் விரைவாக செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...