தாராபுரத்தில் டெம்போ டிராவலர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனம், டெம்போ டிராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு. பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அலங்கியம் சாலையில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாகனம் இண்டிகேட்டர் போடாமல் திடீரென சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியது. இதனால், அந்த வழியாக வந்து கொண்டிருந்த தனியார் டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், தனியார் ட்ராவலர் வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. இரு ஓட்டுனர்கள் இடையே சாலையின் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் கரூரிலிருந்து பேருந்து நிலையம் செல்லவிருந்த அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தினர்.



இதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...