உடுமலை மின்பகிர்மான திட்டமேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் இல்லை என்று அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவிவந்தன. இது உடுமலை பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும், இந்த இடமாற்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, அமமுக மற்றும் பல்வேறு பொது அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.



இந்நிலையில், இந்த அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற முடிவு எதுவும் செய்யப்படவில்லை என உடுமலை மின்வாரிய அலுவலகம் மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஸ்வநாதன் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...