திருப்பூரில் பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் - போலீசார் குவிப்பு!

திருப்பூர் அடுத்த தொட்டி மன்னரை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள தொட்டி மன்னரை பகுதியில் முறைகேடாக இயங்கி வந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு தொட்டி மன்னரை அருகேயுள்ள ரோஜா நகர் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் குடியிருப்புகளுக்கு நடுவே கடந்த 7 ஆண்டுகளாக முனியசாமி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகள் அரைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குழந்தைகள், பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பொதுமக்கள் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலையை ஆய்வு செய்த பொழுது பிளாஸ்டிக் தொழிற்சாலை முறைகேடாகவும் எந்த அனுமதியும் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து முறைகேடாக இயங்கி வந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை இயக்க கூடாது எனவும் முறையாக அனுமதி பெற்ற பின்னர் தான் இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொழிற்சாலையை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...