ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் ராஜகோபுரம் முன்பு 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை, ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் மாசாணி அம்மன் கோயில் கருவறையில் அம்மன் சயன ரூபத்தில் இருப்பது போன்று மயான கொட்டகையில் அம்மனின் திருவுருவம் அமைக்கப்பட்டது.



பின்பு, அம்மனின் காலடியில் அசுரனின் கோர உருவமும் அம்மனின் ஒரு கையில் கபாலம், மற்றொரு கையில் எலும்பு துண்டு வைத்திருக்க அம்மனின் திருவுருவத்திற்கு பட்டுப்புடவை போர்த்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



பக்தர்கள் முன்னிலையில் அம்மனின் திருவுருவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



அம்மன் அருளாளி அருள் வந்து ஆடியபடி அம்மனின், மணல் திருவுருவத்தை கலைத்தபடியே அம்மன் சிரசின் மீது உள்ள சூலாயத்தை கையில் எடுத்துக் கொண்டு, அம்பிகையின் வலது கையில் உள்ள எலும்பு துண்டை தனது வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக காட்சி அளித்தார்.



இந்த காட்சியை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் கண்டு தரிசனம் செய்தனர். இறுதியில் அம்மனின் திரு உருவத்திலிருந்து மண்ணை எடுத்து கலசத்தில் சேகரித்து எடுத்துச் சென்று கோயிலில் உள்ள கருவறையில் வைக்கப்பட்டது.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு வரும் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...