ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் ராஜகோபுரம் முன்பு 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை, ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் மாசாணி அம்மன் கோயில் கருவறையில் அம்மன் சயன ரூபத்தில் இருப்பது போன்று மயான கொட்டகையில் அம்மனின் திருவுருவம் அமைக்கப்பட்டது.



பின்பு, அம்மனின் காலடியில் அசுரனின் கோர உருவமும் அம்மனின் ஒரு கையில் கபாலம், மற்றொரு கையில் எலும்பு துண்டு வைத்திருக்க அம்மனின் திருவுருவத்திற்கு பட்டுப்புடவை போர்த்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



பக்தர்கள் முன்னிலையில் அம்மனின் திருவுருவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



அம்மன் அருளாளி அருள் வந்து ஆடியபடி அம்மனின், மணல் திருவுருவத்தை கலைத்தபடியே அம்மன் சிரசின் மீது உள்ள சூலாயத்தை கையில் எடுத்துக் கொண்டு, அம்பிகையின் வலது கையில் உள்ள எலும்பு துண்டை தனது வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக காட்சி அளித்தார்.



இந்த காட்சியை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் கண்டு தரிசனம் செய்தனர். இறுதியில் அம்மனின் திரு உருவத்திலிருந்து மண்ணை எடுத்து கலசத்தில் சேகரித்து எடுத்துச் சென்று கோயிலில் உள்ள கருவறையில் வைக்கப்பட்டது.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு வரும் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...