பல்லடத்தில் தொடரும் பைக் திருட்டு - திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்!

பல்லடத்தில் இரவு நேரங்களில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இரவுநேர ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராயர்பாளையம், வெங்கடாபுரம், பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாகி வருகிறது.

திருடர்கள் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பல்லடம் பச்சாபாளையத்தில் வசித்து வரும் நிகில் என்பவர் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.



காலையில் எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிகில், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று நேற்றிரவு பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமாக வசித்து வரும் வேலுச்சாமி என்பவரது இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.



மேலும் வேலுச்சாமி வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு வாகனங்களை உடைக்க முயன்று உடைக்க முடியாததால் வேலுச்சாமியின் வாகனத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக ஏழு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருடப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் பல்லடம் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், பல்லடம் முழுவதும் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...