கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தைப்பூச திருவிழா - போலீஸ் குவிப்பு!

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் மாதங்களில் ஒன்று தை மாதம் தான். ஏனென்றால், தை மாதம் பிறந்தவுடன் வருடந்தோறும் தைப்பூச நன்னாளில் முருக பெருமானுக்கு பக்தி பரவசத்துடன் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை மட்டுமின்றி மருதமலை போன்ற புகழ்பெற்ற முருகன் கோயில்களில், முருகன் கடவுள் குடிகொண்ட அனைத்து கோயில்களிலும் தைப்பூச பூஜைகள் நடக்கின்றன.



அந்த வகையில் கோயமுத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஈஸ்வரன் மற்றும் பார்வதி, முருகன் கடவுள் குடிகொண்டதனால் தை பூசைகள் நடக்கும். இந்த நிலையிலே இரண்டு வருடங்களாக கொரோனாவின் காரணமாக பக்தர்கள் இன்றி தைப்பூச பூசைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி பக்தர்கள் புடை சூழ பூசைகள் நடக்கின்றன. இந்த நிலையில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் போலீசார் வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.



இந்த நிலையில் இந்து அமைப்புகள், பாஜகவினர் வழிபடும் முக்கிய கோயில்களில் ஒன்றான கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.



இந்நிலையில், முந்தைய நிகழ்வுகளை மனதில் கொண்ட காவல்துறை அதிகாரிகள் கோட்டை ஈஸ்வரன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசாரை ஈடுபடுத்தியுள்ளனர்.



மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையாளர் சிலம்பரசன் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் வீரபாண்டி தலைமையிலான 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 230க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...