நீலகிரி கூடலூர் அருகே டிப்பர் லாரியில் ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் - இருவர் கைது!

கூடலூர் கோழிப்பாலம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், கட்டுமான பொருட்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் டிப்பர் லாரியில் கடத்திச் சென்ற ரூ.1.12 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கூடலூர் பகுதி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா என 3 மாநிலங்களும் சந்திக்கும் இடமாக உள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக கடத்தல் சம்பவம் அதிகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஹான்ஸ் போன்ற குட்கா போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தமிழக, கேரளா, கர்நாடக எல்லை சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் உத்தரவு படி கூடலூர் போலீசார் கோழிப்பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் மம்பாடு பகுதியிலிருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.



அப்போது அந்த லாரியிலிருந்து ஒரு லட்சத்தி 12 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலிசார் லாரியில் இருந்த அஸ்கர்(37) மற்றும் முஜீப் ரஹ்மான் (32) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...