கோவை - சத்தியமங்கலம் சாலையில் சென்றவர்களுக்கு பாலியல் சீண்டல் விடுத்து பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது

சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்றவர்களிடம் பாலியல் சீண்டல் விடுத்து பணம் கேட்டு தொந்தரவு செய்த 2 திருநங்கைகளை கைது செய்து ஜாமீனில் விடுவித்த காவல்துறை, ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு.


கோவை: கோவை - சத்தியமங்கலம் சாலையில் சென்றவர்களிடம் பாலியல் ரீதியாக சீண்டி பணம் கேட்டு தொந்தரவு செய்த 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து செல்லும் பொழுது கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் சிலரை வழிமறித்து தொந்தரவு செய்துள்ளனர்.

இதனைப் இரவு ரோந்து பணியின்போது பார்த்த கோவை மாநகர துணை ஆணையாளர் சந்திஸ், நடத்திய விசாரணையில், நள்ளிரவில் திருநங்கைகள் சாலையில் வரும் நபர்களை வழிமறித்து அவர்களை பாலியல் ரீதியாக அணுக வற்புறுத்தியது தெரியவந்தது.

மேலும் நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் என பலரையும் வழிமறித்து உடலுறவு வைத்துக் கொள்ள அழைப்பதும், அவர்களிடமிருந்து பணம் பொருட்களை கேட்டு தொந்தரவு செய்வதும் தொடர்ந்து நடந்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதன் காரணமாக சிட்டி போலீசார் அவ்வப்போது திருநங்கைகளை எச்சரித்து அனுப்பினாலும், போலீசாரின் எச்சரிக்கையினை அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளும் திருநங்கைகள், பின்னர் மீண்டும் இதே போன்று செயலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

திருநங்கைகள் என்பதனால் பொதுமக்கள் போலீஸிடம் புகார் தரவும் தயங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் பாலியல் ரீதியாக உடலுறவுக்கு அழைத்து பணம் கேட்டு வற்புறுத்திய கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த திருநங்கை ருத்னால் (22), மற்றும் பொன்னியபுரம் பகுதியைச் சேர்ந்த ரோகினி (18) ஆகியோரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இனி வரும் காலங்களில் இது போன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் காந்திபுரம், 100 அடி ரோடு, ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் திருநங்கைகள் இதுபோன்ற தொந்தரவு சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் நாள்தோறும் இனி நள்ளிரவில் ரோந்து செல்ல திட்டமிட்டிருக்கின்றனர். திருநங்கைகளின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...