வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கோவையில் தனியார் நிறுவனம் மோசடி

கோவை மாவட்டம், வடகோவையில், ஏர்குளோபல் ராஜ்டூர் என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த கோவை புலியகுளத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆலாந்துறையை சேர்ந்த மாரிமுத்து, மலுமிச்சம்பட்டியை சேர்ந்த இந்துஜா ஆகியோர், இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வடகோவையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர்கள் சென்றபோது, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் செலுத்துமாறு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதன்படி, சந்தோஷ்குமார் 3.30 லட்சம் ரூபாய், மாரிமுத்து 1.50 லட்சம் ரூபாய், சிந்துஜா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை எதுவும் பெற்றுத்தராமல் இருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 3 பேரும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததைத்தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...