வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கோவையில் தனியார் நிறுவனம் மோசடி

கோவை மாவட்டம், வடகோவையில், ஏர்குளோபல் ராஜ்டூர் என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த கோவை புலியகுளத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆலாந்துறையை சேர்ந்த மாரிமுத்து, மலுமிச்சம்பட்டியை சேர்ந்த இந்துஜா ஆகியோர், இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வடகோவையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர்கள் சென்றபோது, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் செலுத்துமாறு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதன்படி, சந்தோஷ்குமார் 3.30 லட்சம் ரூபாய், மாரிமுத்து 1.50 லட்சம் ரூபாய், சிந்துஜா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை எதுவும் பெற்றுத்தராமல் இருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 3 பேரும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததைத்தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...