ஹூண்டாய் கார் கம்பெனியுடன் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரி உடன்பாடு

நாட்டில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரியில் “ஹூண்டாய் தொழில் மேம்பாட்டு மையம்” ஒன்றை துவக்கியுள்ளது.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புகளின் ஒரு பகுதியாக ஹூண்டாய் நிறுவனம், தரமான கல்வியுடன், கார், இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் கல்வி உபகரணங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வழங்க முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஒய்.கே கூ இதுகுறித்து கூறுகையில், “எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து, ஒரு பொறுப்புள்ள நிறுவன குடிமகனாக திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆட்டோமொபைல் சேவை ஆலோசகர்களை உருவாக்கும் இந்த மையம், மாணவர்களுக்கு நவீன வாகன தயாரிப்பு தொழில் நுட்பங்களை வழங்குவதோடு, வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்,” என்றார்.

புதிய பாடத்திட்டம் மற்றும் பயிற்சிகள், ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்துக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும். பாலிடெக்னிக் கல்லூரியில் திறமையானவர்களை உருவாக்குவதோடு, இந்திய வாகன சேவை தொழிலுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வின் கீ்ழ், திறன் மேம்பாட்டு பயிற்சியானது முதல்முறையாக 2012ம் ஆண்டு ஐடிஐ பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்தது. தற்போது நாடு முழுவதும் 38 ஐடிஐ-க்களைக் கொண்டுள்ளது.

மாநிலத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ஐடிஐ உடன், பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் பயிற்சி பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பயின்றோரில் 95 சதவீதத்தினருக்கு ஹூண்டாய் டீலர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஐடிஐக்களில் படித்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பயனடைந்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...