கோவை கவுண்டம்பாளையத்தில் குட்கா விற்பனை - மளிகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதை பொருட்களை விற்பனை செய்த மளிகைக்கடை உரிமையாளர்கள் தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை சிலர் மளிகைக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் தலைமையிலான குழு, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மளிகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய குட்கா, பான்மசாலா போதை பொருட்களை அங்குள்ள தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரின் மளிகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

இதுதொடர்பாக மளிகைக்கடை உரிமையாளர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...