கோவை கவுண்டம்பாளையத்தில் குட்கா விற்பனை - மளிகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதை பொருட்களை விற்பனை செய்த மளிகைக்கடை உரிமையாளர்கள் தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை சிலர் மளிகைக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் தலைமையிலான குழு, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மளிகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய குட்கா, பான்மசாலா போதை பொருட்களை அங்குள்ள தேவராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோரின் மளிகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

இதுதொடர்பாக மளிகைக்கடை உரிமையாளர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...