தாராபுரம் அருகே கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை - பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான கடைகளில் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசு அனுமதி இல்லாத நிறுவனங்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கடைகளில் வெளியில் தயாரிக்கப்படும் முருக்கு, மிக்சர், பிஸ்கெட்டுகள், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் பொருளை தயாரிக்கும் போது அதன் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த பாக்கெட்டில் உள்ள லெபிளில் எதுவும் குறிப்பிடுவதில்லை.

இது குறித்து நகராட்சி, சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் எவரும் மாதக்கணக்கில் ஆய்வு செய்ய வராமல் உள்ளனர். இதனால் கடை உரிமையாளர்களின் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தனியார் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பண்டங்களை வாங்கி உண்ணும் போது ஒரு விதமான வாடை வருவதுடன், அவற்றின் சுவை தன்மை மாறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் உடல் உபாதைளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உணவு பொருள் கட்டுப்பாட்டு துறையினர் உடனடியாக ஆய்வு மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...