திருப்பூர் உடுமலையில் கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை அமோகம்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தர்பூசணி பழ விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் கருத்து.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சீசனுக்கு முன்னதாகவே, தர்பூசணி விற்பனை களைகட்டி வருகிறது.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளுக்கு, கோடை காலத்தை சமாளிக்க, திண்டிவனம் உட்பட பகுதிகளில் இருந்து, தர்பூசணி விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது. இச்சீசனை இலக்கு வைத்து, உடுமலை பகுதியிலும், தர்பூசணி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தை இலக்காக வைத்து, நுாற்றுக்கணக்கான ஏக்கரில், தர்பூசணி நடவு செய்யப்பட்டு, தொடர் மழையால், சில இடங்களில் பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிப்பு இல்லாத பகுதிகளில், அறுவடை இன்னமும் துவங்காத நிலையில், வழக்கத்தை விட முன்னதாகவே பிற மாநிலங்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.



அதன்படி, ஆந்திராவில், இருந்து கிலோ, 20 ரூபாய் முதல் தர்பூசணி கொள்முதல் செய்யப்பட்டு, உடுமலை நகர பகுதியில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருவதால், வெளிமாநில தர்பூசணி விற்பனையும், களைகட்டி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...