ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளது - சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து

ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளதாகவும், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ்., மையங்களாக மத்திய அரசு செயல்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து.



கோவை: ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு நேரெதிராக இடதுசாரிகள் சித்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும் என்றும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட சி.பி.ஐ அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், பாஜகவை சேர்ந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும், ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக உள்ளதாக கூறிய அவர், ஆளுநர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநர் சனாதன கருத்துகள் தெரிவித்து வருவது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், மாநிலத்திற்கு மாநிலம் வேறு கட்சிகளாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துகொண்டு பாஜகவிற்கு எதிராக நாட்டை பாதுகாக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சி என்பது நிராகரிக்க முடியாது என்றும், கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும், அதைக் கடந்து ஆர்.எஸ்.எஸ்.சை, பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து நாட்டை காக்க பொதுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றவர், பாஜக ஆட்சியைப் பிடித்தவுடன், இடதுசாரிகள் வீழ்ந்து வருவது என்பதைத் தான் ஏற்கவில்லை என்றும், தேர்தல் அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அரசியல் கொள்கையில் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு நீடிப்பதனால் தான் சமீபத்தில், பிரதமர் கம்யூனிசம் என்பது அபாயகரமான சித்தாந்தம், அழிவை ஏற்படுத்தி விட்டு போய்விடும் என்று சொன்னதை குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்திற்கு நேரெதிராக இடதுசாரிகள்சித்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும் என்றும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக டி.ராஜாவை தமிழ்நாடு பலசமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...