வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை - பொதுமக்கள் அச்சம்!

வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில் வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் கூட்டமாகவும், குட்டியுடன் மற்றும் தனியாகவும் சுற்றித்திரிந்து வருகின்றன.

குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தும் யானைகள், வாழைமரம் பலா மரம் போன்றவற்றையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று காலை வால்பாறை அருகேயுள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை, தேயிலைத் தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயேவிரட்டினர். மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...