கோவை அருகே இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து - இளம்பெண் உட்பட 2 பேர் படுகாயம்

கோவை துடியலூர் அருகே இளைஞர் ஓட்டிவந்த ஆடி கார், அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கேரளா மாநிலம் ஆனைகட்டி சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26) இவர் நேற்று தனது ஆடி காரை ஓட்டிக்கொண்டு வடமதுரையில் இருந்து பழனி கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றுள்ளார். அவருடன் துடியலூர் சேர்ந்த சையது முகமது (வயது30) கேரளா ஆனைகட்டி அகழி பகுதியைச் சேர்ந்த மிதுனியம் (வயது 27), ஆகியோரும் சென்றுள்ளனர்.



அதிவேகமாக சென்ற கார், பழனிகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அஜய் (வயது 29), என்பவர் மீது மோதி, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கோவை ரோஸ்கார்டன் தென்றல் நகரை சேர்ந்த சசிரேகா (வயது 29) என்ற பெண் மீதும் மோதியது.



இந்த விபத்தில், சசிரேகா பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜய் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் போலீசார், காரை ஓட்டி வந்த விஷ்ணுவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கார் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதி சாலை ஓரத்தில் இருந்த புதருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...