வால்பாறையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில், யாருக்கும் அதிஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வால்பாறைக்கு வந்து சேர்ந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 40 க்கும் மேற்பட்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது.

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழனி, சாலகுடி, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று காலை வெள்ளைமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் 40 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பயணிகள் இருந்தனர்.

அதேபோல், வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கும் ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி ஆசிரியர்கள் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பயணிகள் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர்.



கூலாங்கள் ஆற்று பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் மண்ணை தோண்டி எடுத்துப் போடப்பட்டிருந்தது.



இந்நிலையில், அரசு பேருந்துகள் எதிர் எதிரே வரும்போது விலகி செல்ல வழி இல்லாமல் போனதால், இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



அதில் ஒரு பழைய பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தால், பேருந்தில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



இந்த விபத்தால், பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து வால்பாறை வந்து சேர்ந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...