வால்பாறையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில், யாருக்கும் அதிஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வால்பாறைக்கு வந்து சேர்ந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 40 க்கும் மேற்பட்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது.

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழனி, சாலகுடி, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று காலை வெள்ளைமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் 40 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பயணிகள் இருந்தனர்.

அதேபோல், வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கும் ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி ஆசிரியர்கள் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பயணிகள் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர்.



கூலாங்கள் ஆற்று பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் மண்ணை தோண்டி எடுத்துப் போடப்பட்டிருந்தது.



இந்நிலையில், அரசு பேருந்துகள் எதிர் எதிரே வரும்போது விலகி செல்ல வழி இல்லாமல் போனதால், இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



அதில் ஒரு பழைய பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தால், பேருந்தில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



இந்த விபத்தால், பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து வால்பாறை வந்து சேர்ந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...