கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கவிதை போட்டி: வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரொக்கப் பரிசுகள்!

கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள அருவி வாசகர் வட்டம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான தமிழ் கவிதைப் போட்டி நடைபெற்றது. இந்த கவிதை போட்டியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில், சி.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி மாணவர் பிரகாஷ்ராஜ்-க்கு முதல் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அதேபோல் தென்காசி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி கிருஷ்ணம்மாளுக்கு 2ஆம் பரிசாக ரூ.1,500 வழங்கப்பட்டது.

மேலும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ரிதன்யா சாருமதிக்கு மூன்றாம் பரிசாக ரூ.500, அதே பி.எஸ்.ஜி கல்லூரியை சேர்ந்த சுந்தருக்கு 4ஆவது பரிசாக ரூ.250 வழங்கப்பட்டது.



தொடர்ந்து இந்த கவிதை போட்டியில் மேடையில் தங்கள் கவிதைகளை வாசித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் முனைவர் மு. நாகராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமகால சமூக-அரசியல் பிரச்சினைகளை வாசகர்களுக்கு தெளிவாகப் புரிந்துகொள்ளும் கவிதைகள் மட்டுமே தலைமுறைகளை கடந்து செல்லும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அருவி வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் அனைவரையும் வரவேற்றார், இந்த விழாவை சக்தி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...