உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு குடிமகன்கள் நடமாட்டம்!

உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையில் மது பிரியர்கள் அடிக்கடி விழுந்து விடுவதால் உடனடியாக அதனை மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் ஆய்வு மாளிகைக்கு அருகே உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அருகேயுள்ள தளி சாலையில் அரசினர் ஆய்வு மாளிகை அமைந்து உள்ளது. இந்த ஆய்வு மாளிகைக்கு உடுமலை பகுதியில் ஆய்வு செய்வதற்காக வரும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்குவதற்காக இந்த ஆய்வு மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆய்வு மாளிகை முன்பு திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதனிடையே அந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் போதையில் தள்ளாடி ஆய்வு மாளிகை முன்பு உள்ள சாக்கடையில் அடிக்கடி விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக இதுவரை மூன்று பேர் அந்த திறந்தவெளி சாக்கடையில் விழுந்து உள்ளனர். இதனால் ஆய்வு மாளிகைக்கு வரும் அதிகாரிகள் முகம் சுளித்தவாறு சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் ஆய்வு மாளிகை தரப்பிலும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...