பயிர் நூற்புழுக்களை அறிய மண் மாதிரிகள் எடுக்கும் முறைகள்

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் சிறு மண் துகள்களிடையே உள்ள இடைவெளியிலும் மண்துகள்களில் ஒட்டிய மெல்லிய நீர்ப்படலத்திலும் இருந்து கொண்டு வாழ்பவை. இவ்வகை நூற்புழுக்களை அறிய அதற்கேற்றாற் போல் மண் மாதிரிகளை எடுக்க வேண்டும். மண்ணின் சத்துக்களை அறிய எடுக்கப்படும் மாதிரிகளுக்கும், நூற்புழுக்களை அறிய எடுக்கும் மாதிரிகளுக்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உள்ளது.

நூற்புழுக்களை அறிய எடுக்கப்படும் மண் மாதிரிகள் உறிஞ்சு வேர்களை ஒட்டியுள்ள வேரண்மைப் புலத்தில் இருந்து சேகரிக்க வேண்டும். மண்மாதிரிகள் நிலத்தில் பயிர் உள்ள போதும், பயிர் இல்லாத போதும் எடுக்கலாம். பயிர்க் காலத்திற்கு முன்பு எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து என்ன வகையான நூற்புழுக்கள் மண்ணில் உள்ளன எனவும் அவற்றின் எண்ணிக்கையையும் அறிந்து அதற்கேற்ப நூற்புழு நிர்வாகத்தை மேற்கொள்ளலாம்.

மாதிரிகள் எடுக்கும் முறைகள்

நிலத்தில் பயிர்கள் இருப்பின், பயிரின் வேர்ப் பரவலைப் பொறுத்து, மேல் மண்ணை இரண்டு அங்குலம் நீக்கிவிட்டுப் பின் 3-6 அங்குல ஆழத்தில் செடியில் இருந்து 4 அங்குலம் தள்ளி, எடுக்கலாம். 

வாழை போன்ற பயிர்களில் மரத்தில் இருந்து 1 – 1½ அடி ஆழத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். மண்ணுடன் சேர்த்து வேர்த் துண்டுகளையும் எடுக்க வேண்டும். இதில் இருந்து வேரில் ஊடுருவியுள்ள நூற்புழுக்களையும் அறியலாம்.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பயிர்களுக்கு மரத்தின் நிழல் வட்டக் கோட்டருகே 1½ - 2 அடி ஆழத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும் ஏனெனில் இங்குதான் புதிய உறிஞ்சு வேர்கள் உள்ளதால், நூற்புழுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

தென்னைக்கு 75 செ.மீ ஆழத்திலும் பாக்குக்கு 50 செ.மீ ஆழத்திலும் மரத்தில் இருந்து 75 செ.மீ தள்ளி மாதிரிகள் எடுக்க வேண்டும். மண் மாதிரிகள் எடுக்க ஷவல் எனப்படும் கைக் கொத்து சிறந்தது. மண்வெட்டி கொண்டும் எடுக்கலாம்.

மண் மாதிரிகளின் அளவு

மண் மாதிரிகளை நான்கு அல்லது ஐந்து செடிகளின் வேரிண்மைப் புலத்தில் இருந்து எடுத்து இவற்றை ஒன்று சேர்த்து சுமார் 250 கிராம் அளவுகளில், பாலிதீன்பைகளில் இட்டு, அவற்றுடன் பயிர், முந்தியப் பயிர், பயிரின் வயது, ஊர் ஆகிய விபரங்களுடன் அனுப்பவும். மண் மாதிரிகள் இலேசான ஈரப்பத்துடன் இருப்பது நல்லது.

மண்மாதிரிகளைப் பாpசோதனைக்கு எங்கு அனுப்புவது

சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ‘பேராசிரியர் மற்றும் தலைவர், நூற்புழுவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது பல்கலைக்கழகத்தின் மதுரை, பெரியகுளம், திருச்சி, உதகை ஆகிய நூற்புழு ஆய்வகங்களுக்கு அனுப்பி, நூற்புழுக்கள் பற்றிய விளக்கம் மற்றும் பரிந்துரைகளை இலவசமாகப் பெறலாம்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...