கோவை பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை - நெல்லை இளைஞர் கைது!

நெல்லை மாவட்டம், செண்பகராமன் நல்லூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், கோவையை சேர்ந்த 25 வயது பெண்ணின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


கோவை: நெல்லை மாவட்டம் செண்பகராமன் நல்லூர் பகுதியை சேர்நதவர் மணிகண்டன் (வயது31).



இவர் கேரள மாநிலம் மலப்புரம் பேக்கிரியில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் ஜஸ்டின் என்ற பெயரில் கணக்கை ஆரம்பித்திருக்கின்றார்.

பின்னர், கோவையை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இருப்பினும், மணிகண்டன் ஜஸ்டின் என்ற பெயரிலேயே, அந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியிருக்கிறார்.

அப்போது அந்த பெண் தனது தனிப்பட்ட புகைப்படங்களை மணிகண்டனுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்த பெண் மணிகண்டனிடம் பேசாமல் இருந்து வந்தார்.

இதனால், ஆத்திரமுடனிருந்த மணிகண்டன் சமூக வலைத்தளத்தில் பல்வேறு போலி கணக்குகளை ஆரம்பித்து அந்த பெண்ணிற்கு தொடர்ந்து தொல்லை தந்திருக்கின்றான். மணிகண்டன் அந்த பெண்ணை பாலியல் தொழிலாளிபோல் சித்தரித்து Item Girl Coimbatore என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து, அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, மணிகண்டன் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். முன் பின் தெரியாத நபர்களிடம் சமூக வலைதளங்களில் பெண்கள் தொடர்பில் இருக்க கூடாதென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...