கோவை சுந்தராபுரத்தில் குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்கா!

கோவை சுந்தராபுரம் அருகே செயல்பட்டு வரும் சிறுவர் பூங்காவில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில், உடனடியாக குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுந்தராபுரம் அடுத்த மதுக்கரை சாலையில் உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு செல்வது வழக்கம்.

மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நடைப்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதுதவிர மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

இந்த நிலையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பது அங்கு வரும் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள், காய்ந்து சருகுகளாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சுந்தராபுரம் பகுதியை பொறுத்தவரை பொழுது போக்குவதற்கு என்று குறிப்பிட்ட இடம் கிடையாது. இந்த ஒரு பூங்கா மட்டுமே உள்ளது.

ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக காட்சி அளிக்கிறது. இங்கு வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பைகளை அகற்றுகின்றனர். குப்பைகள் தேங்கும் காரணத்தால் பூங்காவிற்குள் கொசுக்கள் அதிகரித்துள்ளது, என்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...