உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் - முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

உடுமலை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டத்தில், காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம், ஒன்றிய தலைவர் எலிசபெத் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு ஊழியர் பொறுப்பில் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் ஒன்றிய பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணைத் தலைவர் மாலதி, ஒன்றிய செயலாளர் ஆனந்தி, ஒன்றிய பொருளாளர் சகிலா பானு, ஒன்றிய இணைச் செயலாளர் சித்ரா, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, கவிதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....