வால்பாறை சோலையாறு அணையின் நீர் மட்டம் சரிவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 604 கனஅடியாகவும் உள்ளது. விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான சோலையாறு அணை 160 அடி உயரம் உள்ளது. அணையில் 5 டி.எம்.சி தண்ணீர் சேகரிக்கப்படும். இதில் அணையின் உபரி நீர் சேடல் வழியாக மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் 74 வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்பின் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று ஆழியார் அணை மற்றும் அமராவதி அணைக்கு தண்ணீர் செல்கிறது.



சோலையாறு அணை தண்ணீர் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் மழை இல்லாமல் ஆற்றில் தண்ணீர் வற்றிபோய் காணப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது. தற்போது, அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 604 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



இதனால், அணையில் தண்ணீர் வற்றிபோய் மண் திட்டுக்கள் காணப்படுகிறது. சோலையாறு அணை தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அணையின் நீர் மட்டம் சரிவால், விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...