கோவை - சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோயில் மாசித் திருவிழா

கோவை சொக்கம்புதூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கோவை சொக்கம்புதூர் செல்லப்பாபுரம் பகுதியில் உள்ள மகாசக்தி மாசாணியம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மாசி மாதத்தை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று சத்தி கரகம் அழைத்து வருதல் மற்றும் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செய்தனர்.



அதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணியளவில் உச்சிக்கால பூஜை நடைபெற்ற மகாமுனி பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த திருவிழா வருகின்ற 26ம் தேதி சிறப்பு அபிஷேக பூஜை உடன் முடிவடைகிறது.



இந்நிகழ்வில், கோவிலின் தர்மகர்த்தா லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆனந்தன், செயலாளர் துரைராஜ் உட்பட குடும்ப பெரியவர்கள் கிருஷ்ணன், கதிர்வேல், வேணுகோபால் மற்றும் அறங்காவலர்கள் பாலசுந்தரம், பழனிசாமி, மதனகோபால், உமா காந்தன், சுகுமார், செந்தில், ஜனார்த்தனன் மற்றும் கோவில் பூசாரிகள் சிவஞானம், சதீஷ்குமார், லோகசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...