தாராபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூக்குண்டத் திருவிழா கோலாகலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காட்டூர்புதூர் பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் பத்தாம் ஆண்டு திருக்கல்யாண வைபவம் மற்றும் பூ குண்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காட்டூர்புதூர் கிராமத்தில் கட்டாளுர் வார்ளு என்ற குல மக்களின் குல தெய்வமான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் மற்றும் பூ குண்டத் திருவிழா வருட வருடம் வெகு விமர்சையாக அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய விழா குழுவினர் மற்றும் ஆலய சேவா டிரஸ்ட் மூலம் கொண்டாடி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா, தை மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மாசி 7 தேதி மலையனூரில் இருந்து சக்தி தீர்த்தம் கொண்டு வந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு செலுத்தி அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம், ஜெப ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை சுவாமி அம்பாளுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு அம்மை அழைக்கப்பட்டு, திருக்கல்யாண வைபவம்நிகழ்ச்சி நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து, மாசி 8 தேதியான நேற்று காட்டூர் புதூர் பகுதியில் இருந்து அக்னி விந்தை அழைத்தனர்.



பின்னர், கோவில் முன்பாக உள்ள அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



பின்னர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, அபிஷேகம் மற்றும் தீபாராதனை, பிள்ளை பாவை எடுத்தல், விசேஷ அபிஷேகம், அன்னாபிஷேகம்செய்யப்பட்டு பின்னர் அலங்கார சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...