தாராபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூக்குண்டத் திருவிழா கோலாகலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காட்டூர்புதூர் பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் பத்தாம் ஆண்டு திருக்கல்யாண வைபவம் மற்றும் பூ குண்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காட்டூர்புதூர் கிராமத்தில் கட்டாளுர் வார்ளு என்ற குல மக்களின் குல தெய்வமான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் மற்றும் பூ குண்டத் திருவிழா வருட வருடம் வெகு விமர்சையாக அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய விழா குழுவினர் மற்றும் ஆலய சேவா டிரஸ்ட் மூலம் கொண்டாடி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா, தை மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மாசி 7 தேதி மலையனூரில் இருந்து சக்தி தீர்த்தம் கொண்டு வந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு செலுத்தி அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம், ஜெப ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை சுவாமி அம்பாளுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு அம்மை அழைக்கப்பட்டு, திருக்கல்யாண வைபவம்நிகழ்ச்சி நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து, மாசி 8 தேதியான நேற்று காட்டூர் புதூர் பகுதியில் இருந்து அக்னி விந்தை அழைத்தனர்.



பின்னர், கோவில் முன்பாக உள்ள அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



பின்னர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, அபிஷேகம் மற்றும் தீபாராதனை, பிள்ளை பாவை எடுத்தல், விசேஷ அபிஷேகம், அன்னாபிஷேகம்செய்யப்பட்டு பின்னர் அலங்கார சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...