உடுமலை நகராட்சி சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை நகராட்சி யுஎஸ்எஸ் காலனி பகுதியில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவை மூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு யுஎஸ்எஸ் காலனி பகுதியில் அனுஷம் நகர், பாரதியார் காலனி, மதியழகன் நகர் உட்பட பல்வேறு குடியிருப்புகளில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்று இப்பகுதியில் கலைஞர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா யூ.எஸ்.எஸ் காலனி பகுதியில் அமைக்க முடிவு செய்யபட்டது. அதன்படி சிறுவர் பூங்கா பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.



இதன் காரணமாக அப்பகுதி தற்போது, சமூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். மேலும் புதியதாக வாங்கிய விளையாட்டு உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பல லட்சம் மதிப்பில் அமைக்கபட்ட சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...