கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு- இரவிலும் தொடரும் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும், உரிய காரணம் இன்றி மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை:மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து கோவை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஷேக் முகமது என்ற மாணவர் அவரது மனைவியான ஹாரிதா (இருவரும் கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் டிசி தொடர்பாக கல்லூரி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

அதே சமயம் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரையும் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய விளக்கம் அளிக்காமல் மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகம் முன்பு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் இரவு நேரத்திலும் தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உரிய காரணங்கள் இன்றி இடைநீக்கம் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தை காரணம் காட்டி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும் விசாரணைக் குழுவில் மாணவர்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...