கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் மாணவிகளுக்கு, தரமற்ற உணவு, தண்ணீர் வழங்கப்படுவதாக கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் முறையாக உணவு வழங்கப்படாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
3 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கும் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மூன்று விடுதிகளுக்கும் சேர்த்து உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு விடுதி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரமான உணவு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்பதால் அதனையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் கழிப்பிடங்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது.
அப்போது மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திடீரென நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
3 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கும் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மூன்று விடுதிகளுக்கும் சேர்த்து உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு விடுதி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரமான உணவு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்பதால் அதனையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் கழிப்பிடங்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது.
அப்போது மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திடீரென நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.