உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி - தாராபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தாராபுரம் நகர அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.



திருப்பூர்: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.



இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசமாகியுள்ளது.



உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் தாராபுரத்தில் அதிமுக பொருளாளர் சின்னப்பன் தலைமையில் ஆவின் துணைத் தலைவர் டி. எஸ்.சிவக்குமார் முன்னிலையில் அண்ணா சிலை, பெரியகடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



அப்போது, எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க எடப்பாடியார் வாழ்க என முழக்கமிட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...