பல்லடத்தில் ஆட்டோ மீது கார், பேருந்து மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் பேருந்து மோதி ஒருவர் பலியான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அண்ணா நகரில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார். நேற்று இரவு ராமசாமி அண்ணாமலை நகரை சேர்ந்த சரோஜினி என்ற மூதாட்டியும் அவரது மகன் வெள்ளியங்கிரியும் திருப்பூர், அங்கேரிபாளையத்தில் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பிரேம்குமாரின் ஆட்டோவில் பல்லடத்தில் இருந்து வீட்டிற்கு சென்றனர்.

மின் நகர் என்ற இடத்தில் சாலையை ஆட்டோ கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியுள்ளது.



நிலைகுலைந்து நின்ற ஆட்டோ மீது கோவையில் இருந்து கொடுமுடி செல்லும் அரசு பேருந்தும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார் மற்றும் மூதாட்டியின் மகன் வெள்ளியங்கிரி ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதையடுத்து, தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



நேற்று இரவு நடந்த இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. முதலில் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதும் காட்சிகளும் எதிரே வந்த பேருந்து ஆட்டோ மீது மோதும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. விபத்துக்குள்ளான அரசு பேருந்தை பல்லடம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...