பல்லடத்தில் ஆட்டோ மீது கார், பேருந்து மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் பேருந்து மோதி ஒருவர் பலியான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அண்ணா நகரில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார். நேற்று இரவு ராமசாமி அண்ணாமலை நகரை சேர்ந்த சரோஜினி என்ற மூதாட்டியும் அவரது மகன் வெள்ளியங்கிரியும் திருப்பூர், அங்கேரிபாளையத்தில் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பிரேம்குமாரின் ஆட்டோவில் பல்லடத்தில் இருந்து வீட்டிற்கு சென்றனர்.

மின் நகர் என்ற இடத்தில் சாலையை ஆட்டோ கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியுள்ளது.



நிலைகுலைந்து நின்ற ஆட்டோ மீது கோவையில் இருந்து கொடுமுடி செல்லும் அரசு பேருந்தும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார் மற்றும் மூதாட்டியின் மகன் வெள்ளியங்கிரி ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதையடுத்து, தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



நேற்று இரவு நடந்த இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. முதலில் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதும் காட்சிகளும் எதிரே வந்த பேருந்து ஆட்டோ மீது மோதும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. விபத்துக்குள்ளான அரசு பேருந்தை பல்லடம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...