நாக்பூரில் குடிநீர் திட்ட கருத்தரங்கு - கோவை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவுப்பரிசு!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கில், கோவை மாநகர குடிநீர் திட்டத்தின் நவீன செயல்முறைகளை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.


கோவை: நாக்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், கோவை மாவட்ட குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற விவகாரங்கள்‌ துறையின்‌ சார்பில்‌ வட இந்தியாவின்‌ 10 மாநிலங்களுக்கான மண்டலத்திற்கான 24 மணி நேர குடிநீர்‌ திட்டங்கள்‌ குறித்த கருத்தரங்கு மஹாராஷ்டிரா மாநிலம்‌ நாக்பூரில்‌ நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்‌ நடைபெற்ற இந்த கருத்தரங்கில்‌, கோவை மாநகராட்சியின்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டம்‌ குறித்த பல நவீன செயல்முறைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நினைவு பரிசை, திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌, சூயஸ்‌ நிறுவன திட்ட மேலாளர்‌ சங்கராம்‌ பட்நாயக் மற்றும் புவியியல்‌ நிபுணர்‌ சத்யநலம்‌ ஆகியோர் மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் வழங்கினர்.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் தலைமையில் நடைபெற்ற‌ நுகர்வோர்‌ அமைப்புகளுடனான ஆலோசனைக்‌ கூட்டத்தின் போது, நினைவு பரிசினை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, மாநகர பொறியாளர்‌ இளங்கோவன்‌ மற்றும்‌ மாநகராட்சி உயர்‌ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...