கோவை ஈஷா மையத்தை பார்வையிட்ட நாகை மாணவர்கள் - கட்டிடக்கலை கற்றல் ஆய்வுக்காக வருகை!

கோவை ஈஷா மையத்திற்கு, கட்டிடக்கலை கற்றல் ஆய்வுக்காக வருகை தந்த நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு கட்டிடக்கலை நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தை நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பார்வையிட்டனர்.

கோவை ஈஷா யோகா மையத்திற்கு கீழ்வேளூர் பிரைம் கல்லூரியை சேர்ந்த 28 கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் 2 கல்லூரி விரிவுரையாளர்கள் நேற்று வருகை தந்தனர்.

ஈஷா மைய வளாகத்தில் உள்ள சூர்ய குண்டம், நந்தி, லிங்கபைரவி, சந்திரகுண்டம், தியானலிங்க மற்றும் ஆதியோகி திருவுருச் சிலை ஆகிய இடங்களை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது, அவர்களுக்கு அவ்விடங்களின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து மையம் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

ஆன்மீக நோக்கத்தில் அறிவியல் ரீதியாக நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுடன் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தருகின்றனர்.

ஈஷாவின் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் அதன் நுணுக்கங்களை வருகை தரும் பலரும் வியந்து ரசித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...