கோவையில் ஆம்புலன்சிலேயே இளம்பெண்ணுக்கு பிரசவம் - பூமிக்கு வந்த அழகான தேவதை!

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண் ஷிவானிக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்ததால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஊழியர்களே பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே பிரசவ வலியில் துடித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாகுமார். இவரின் மனைவி ஷிவானி (22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது.

இதனால் மிகுந்த வலியில் துடித்த அவரை, 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், உக்கடம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது ஷிவானிக்கு வலி அதிகரித்தது.

குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ நிபுணர் தமிழ்செல்வம் சாலையோரத்தில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு பைலட் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் பிரசவம் பார்த்தார்.

அப்போது ஷிவானிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் பிரசவ அவசரம் உணர்ந்து விரைந்து செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...